×

மண்ணெண்ணெய் ஊற்றி பெண்ணை எரித்துக்கொல்ல முயன்ற ஆசாமி சிக்கினார்

பெரம்பூர்: பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஓட்டேரி எட்வர்ட் பார்க் தெருவை சேர்ந்தவர் ரேணுகாதேவி (52). இவர் ஓட்டேரி திரு.வி.க தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி இவரது கடைக்கு வந்த, ஓட்டேரி பிரிக்ளின் ரோடு பகுதியை சேர்ந்த குமார் (57), திடீரென ரேணுகாதேவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குச்சியை கொளுத்தி போட்டார். ஆனால் தீ சரிவர எரியாததால் ரேணுகாதேவி சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பெற்று ரேணுகாதேவி வீடு திரும்பினர். இதுகுறித்து ரேணுகாதேவி அளித்த புகாரின்படி, ஓட்டேரி போலீசார் வழக்குபதிவு செய்து, ஓட்டேரி பகுதியில் பதுங்கி இருந்த குமாரை நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post மண்ணெண்ணெய் ஊற்றி பெண்ணை எரித்துக்கொல்ல முயன்ற ஆசாமி சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Asami ,Perambur ,Chennai Otteri Edward Park ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...